search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் போராட்டம்"

    • கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
    • முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரியின் முதல்வராக ரெமா உள்ளார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

    அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர்.

    இதனால் கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் கேரள உயர் கல்வித்துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது.

    கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லூரி முதல்வர் ரெமாவையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தார்.

    இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் - உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் பிரிவில் சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் இன்று காலை சரியான நேரத்திற்கு இயக்கப்படாத அரசு நகர பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
    • அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.

    நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-

    ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?

    ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...

    மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு

    ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்

    ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...

    மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.

    ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா

    மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு

    ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...

    மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்

    இவ்வாறு உரையாடல் நீளுகிறது.

    இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.

    இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

    • பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர்.
    • சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பத்மனாபபுரம் கோட்டையை ஒட்டி கல்குளம் அரசு தொடக்க பள்ளி சுமார் 70 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக அரசு பழைய பள்ளி கட்டிடம் இருந்தால் அகற்ற ஆணை பிறப்பித்து புதிய கட்டிடம் கட்ட திட்ட பணிகள் தயாரிக்கபட்டு கடந்த மார்ச் மாதம் கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.

    ஆனால் சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து அடிப்படை வசதிகள் கேட்டு திடீரென பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் அறிந்து தக்கலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை கல்லூரி செல்லாமால் மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்த னர். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஆகியோர் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனிதா சில்தார் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, உணவை சாப்பிட்டனர்.

    • மாணவர்கள் போராட்டத்தால் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டினார்
    • சாலை மறியலில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள இச்சடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கும்முப்பட்டி, இச்சடி, முள்ளுர், முக்காணிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இச்சடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் துணை வட்டாட்சியர் கவியரசு, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, ஆலங் குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் செம்பட்டிவிடுதி போலீசா ர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அந்த கடையை மூடுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள முன்னிலையில் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆசிரியரை தோல்மேல் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    • போராட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டு காலமாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பாபு என்ற ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் இப்பள்ளிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் வந்த பின்னரே நாங்கள் பள்ளிக்குள் நுழைவோம் என்று பிடிவாதமாக போரா ட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் பாபுவை மீண்டும் சொரகுளத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வந்து சேருமாறு அறிவுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் வந்து பள்ளியில் சேர்ந்ததும் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆசிரியரை தங்கள் தோல் மேல் தூக்கி அழைத்து வந்து மாணவர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அவரை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

    இந்த போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகத்தின் முன்பு பரபரப்பு காணப்பட்டது. நீண்ட நேரமாக ஆவேசமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

    அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
    • சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும், கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம்.

    இதனை அப்பகுதி மக்கள் அடிக்கடி கண்டித்து வந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து அமர்ந்திருப்பதையும் விமர்சித்தனர்.

    பொதுமக்களின் விமர்சனத்தை மாணவ, மாணவிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து பேசி வந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு, இரவாக நீண்ட இருக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஒருவர் மட்டுமே அமரும் வகையில்தனித்தனி இருக்கையாக மாற்றி விட்டனர். மறுநாள் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் இருக்கை துண்டிக்கப்பட்டு தனித்தனியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நீண்ட இருக்கை துண்டிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் பஸ் நிறுத்தத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துண்டிக்கப்பட்ட இருக்கையில் மாணவர்கள் அமர்ந்து கொள்ள அவர்களின் மடியில் மாணவிகள் நெருக்கமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேரம் செல்ல செல்ல கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலரும் பேராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

    இந்த பதிவை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவும் பார்த்தார். நேற்று அவர் அந்த பஸ் நிறுத்தத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை ஏற்கமுடியாது.

    இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறி திளைப்பவர்கள், காலம் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம் பொதுப்பணித்துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்படும், என்றார்.

    • செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆந்திராவில் வருகைப்பதிவு குறைவாக இருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #studentsprotest
    ஐதராபாத் :

    ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் விஞ்ஞான் எனும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களில் 75 சதவிகிதத்திற்கு குறைவாக வருகைப்பதிவு வைத்துள்ளவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

    ஆனால், நிர்வாகத்தின் முடிவினால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மாணவர் ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ஜவஹர்லால் நேரு தொழில்நுப்ட பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 65 சதவிகிதத்திற்கு கீழ் வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்ய வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.

    ஆனால், அதற்கு மாறாக 75 சதவிகிதத்திற்கு குறைவாக உள்ளவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #studentsprotest
    தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இன்று காலை வழக்கம் போல் மாணவ - மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து வகுப்புகள் தொடங்கிய பின்பு அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு முன்பு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் மாவட்ட தலைவர் பூவரசன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் மாணவ-மாணவிகள் தமிழக மாணவர்களை கொலை செய்யும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்களை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர கூடாது. விவசாய நிலங்களை அழித்து புதிதாக கொண்டுவரும் சேலம் - சென்னைக்கு 8 வழிச்சாலை பணிகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேலும் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    ×